Friday 18 November 2016

Tamil-porulilakkanam

பொருள் இலக்கணம் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்

1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள்  - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்

3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.

5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்

7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.

9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை - ஒருதலை  ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு

No comments:

Post a Comment