Tuesday 8 November 2016

Tamil Q&A

1. “தீ இனிது“ என்று பாடிய கவிஞர்
யார்?
--பாரதியின் வசனகவிதை
2. “புத்தகங்களே குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்“ என்ற கவிஞர்
யார்?
--அப்துல் ரகுமான்.
3. “முகத்தில் பிறப்பதுண்டோ
முட்டாளே“ என்ற கவிஞர் யார்?
--பாரதிதாசன்.
4. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை
பின்னர் நாவலாக வளர்ந்தது?
--அக்னிப்பிரவேசம்.
5. ‘பள்ளிக்கூடம் இல்லாத ஊரில்
படிக்கப்போறேன்“ என்றவர் யார்?
--பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
6. தன் மனைவியை இறைவனுக்காக
விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
--இயற்பகை நாயனார்.
7. கடவுளும் கந்தசாமியும் –
சிறுகதை ஆசிரியர் யார்?
--புதுமைப்பித்தன்
8. கலப்புத் திருமணத்தைக்
கருவாகக் கொண்ட அண்ணாவின்
நாவல் எது?
--குமரிக்கோட்டம்
9. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை
இயற்றியவர் யார்?
--கோபாலகிருஷ்ண பாரதி
10. பண்ணாய்வான் பசு எனப்
புகழப்படும் இசைத்தமிழறிஞர் யார்?
--குடந்தை ப.சுந்தரேசனார்.
11. வள்ளலாரின் கீர்த்தனைகள்
அருட்பா அல்ல, மருட்பா என்றவர்
யார்?
--யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை
12. “இருபத்துநாலாயிரம் நபிகளில்
ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன்
வாப்பா” – யார் எழுதிய கவிதை?
--எச்.ஜி.ரசூல்
13. “காவிய காலம்“ என்ற ஆய்வு
நூலை எழுதியவர் யார்?
--வையாபுரியார்.
I4. “புதுக்கவிதை –சொற்கள்
கொண்டாடும் சுதந்திரதின விழா“
–என்றவர் யார்?
--வைரமுத்து
15. “இரவில் வாங்கினோம்,
விடியவே இல்லை“ –என்ற கவிஞர்
யார்?
--சேலம் ம.அரங்கநாதன்
16. “உழைப்பின் வாரா உறுதிகள்
உளவோ”என்று கூறியவர் யார்?
பட்டினத்தார்
17. “இன்னாதம்ம இவ்வுலகம் இனிய
காண்க அதன் இயல்புணர்ந்தோரே”
பாடிய புலவர் யார்?
பக்குடுக்கை நன்கணியார்
(“உண்டாலம்ம இவ்வுலகம்” கடலுள்
மாய்ந்த இளம்பெருவழுதி)
18. “உண்டி கொடுத்தோர் உயிர்
கொடுத்தோரே” வரிகள் இடம் பெற்ற
நூல்கள்
புறநானூறு,
மணிமேகலை
19. தமிழில் விருத்தப்பாவில் எழுந்த
முதல் காப்பியம்? சீவகசிந்தாமணி
( கம்பராமாயணம் இல்லை)
20. ஐம்பெரும்காப்பியம் எனும்
வழக்கை முதலில் கையாண்டவர்?
மயிலை நாதர்
21. “ யான் பெற்ற பெரு பெருக
இவ்வையகம்”, “என்னை நன்றாக
இறைவன் படைத்தனன் தன்னை
நன்றாகத் தமிழ் செய்யுமாறே” எனக்
கூறியவர்?
திருமூலர்
22. “தமிழன் என்று சொல்லடா தலை
நிமிர்ந்து நில்லடா” என்றவர்
நாமக்கல் கவிஞர் ( பாரதிதாசன்
இல்லை)
23. “இப்படை தோற்கின் எப்படை
வெல்லும்” வரி இடம்பெறும் நூல்?
மனோன்மணியம்
24. “காக்கை விடு தூது”
நூலாசிரியர் யார்?
வெள்ளைவாரணர்
25. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு
நடைபெற்ற ஆண்டு
1969
26. இந்திய சுதந்திரப் போராட்ட
வரலாற்றில் 1930ம் ஆண்டுடன்
தொடர்புடையது சட்ட மறுப்பு
இயக்கம்
27. . பொன்னியின் செல்வன் என்ற
தமிழ் நாவலை எழுதியவர் கல்கி
28. சர்க்காரியா கமிஷன் நியமனம்
செய்யப்பட்டது மத்திய-மாநில அரசு
உறவு முறையை ஆராய
29. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்
கிரக இயக்கத்தை தலைமையேற்று
நடத்தியவர்
சி. ராஜகோபாலாச்சாரி
30. தமிழ்க்கவிஞர் சுப்பிரமணிய
பாரதியின் பிறந்த ஊர்
எட்டயபுரம்
36. .ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும்
பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும்
பொதுவான பருவங்கள் - 7
37. சாகித்ய அகாதெமிப் பரிசு
பெற்ற பாவேந்தரின் நூல் எது -
பிசிராந்தையார்
38. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
பாடிய எட்டு நூல்களின்
தொகுப்பிற்கு -------------- என்று பெயர்
- அஷ்டப் பிரபந்தம்
39 பாரதிதாசன் நடத்திய இலக்கிய
இதழ் - குயில்
40. இரட்டுறமொழிதல் என்பது
எவ்வாறு பிரியும் - இரண்டு+உற
+மொழிதல்
41. கமன சித்தர் என்பவர் - வானின்
வழியாகச் செல்லும் சித்தர்கள்
42 . ஊரும் பேரும் என்ற நூலை
எழுதியவர் - ரா.பி.சேதுபிள்ளை
43. கடற்கரை சிற்றூரை குறிக்க
பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு
வந்த சொல் - பாக்கம்
44 Principle/principal - என்பதன் தமிழ்
சொல் - கொள்கை / முதல்வர்
45. உ.வே.சா நினைவு இல்லம் உள்ள
இடம் - உத்தமதானபுரம்
46 டாக்டர் உ.வே.சா நூல் நிலையம்
சென்னையில் எந்த ஆண்டு
நிறுவப்பட்டது - 1942
47. உத்தமதானபுரம் வேங்கட ரத்தினம்
சாமிநாதன் என்பதன் சுருக்கமே
உ.வே.சா. இதில் சாமிநாதன்
என்பது - உ.வே.சா வின் ஆசிரியர்
வைத்த பெயர்
48. பிரெஞ்சுக் குடியரசுத்
தலைவரிடம் செவாலியர் விருது
பெற்றவர் - வாணிதாசன்
49 அன்போடு இயைந்த வழக்குஎன்ப
ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. இதில்
என்பு என்பதன் பொருள் - BONE
50.மாலைக்கால வருணனை
பாஞ்சாலி சபதத்தில் _____________
சருக்கத்தில் அமைந்துள்ளது -
அழைப்புச் சருக்கம

No comments:

Post a Comment