99. துன்பம் எவ்வாறு சிதறிப்போகும்?
தந்தை பெரியார் போல அளவாய், தகுதிக்கேற்ப ஒவ்வொரு நாளும் செலவு செய்து வாழ்ந்தால், பாறாங்கல் மீது விழுந்த மழைநீர் உடனே சிதறிவிடுவது போலத் துன்பம் பறந்தோடும்.
100. தேவார மூவர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்
101. சுந்தரர் தம்பிரான் தோழர் என அழைக்கப்படக் காரணம்
சிவன், சுந்தரரைத் தம் தோழராய்க் கொண்டமையால் அவர் தம்பிரான் தோழர் என அழைக்கபபட்டார்.
102. எச்.ஏ கிருஷ்ணப்பிள்ளை இயற்றிய வேறு நூல்கள்
இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள், இரட்சணிய சமயநிர்ணயம்,போற்றித் திருவகவல் ஆகியன.
103. பாவேந்தர் நூல்களுள் நான்கின் பெயர்
குடும்ப விளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, பிசிராந்தையார் நாடகம்.
104. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்
செந்ந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், சதுரகராதி, பரமார்த்த குரு கதை, வேதியர் ஒழுக்கம், கித்தேரியம்மாள் அம்மானை, திருக்காவலூர்க் கலம்பகம்.
Tuesday 8 November 2016
Tamil textbook Q&A
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment