Tuesday 8 November 2016

Tamil textbook Q&A

தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர்? - பம்மல் சம்பந்தனார்
2. நாடகக் கலைக்கு மற்றொரு பெயர்?- கூத்துக்கலை
3. ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதையின் ஆசிரியர்? - ஜெயகாந்தன்
4. ‘வரதராசனார்’ என்ற நூலின் ஆசிரியர்? - ஆலந்தூர் மோகனரங்கன்
5. முதுமக்கள் தாழிகள் மிகுதியாகக் கிடைத்த இடம்? - ஆதிச்சநல்லூர்
6. வீரத்தை ஆடவரின் முதற்கடமையாகக் கூறும் நூல்? - புறநானூறு
7. ``The Ocean of Wisdom” என்ற ஆங்கில இதழின் ஆசிரியர்? - மறைமலையடிகள்
8. ஆறுமுக நாவலரை, ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டியவர்? - பரிதிமாற் கலைஞர்
9. உ.வே.சா.வின் ஆசிரியர் யார்? - மீனாட்சி சுந்தரனார்
10. உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல் எது? - வேணுலிங்க விலாசச் சிறப்பு
11. ‘பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி. அதுவே
நம் தமிழ்மொழி’ எனக் கூறியவர்? - பாவாணர்.
12. ‘தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்’ என்று கூறியவர்? - தேவநேயப் பாவாணர்.
13. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்? - ரா.பி.சேதுப்பிள்ளை
14. ‘வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்’ என்று எடுத்துரைத்தவர்... - முத்துராமலிங்க தேவர்
15. தற்காலத்தில் மதுரை என அழைக்கப்படும் ஊர் பழங்காலக் கல்வெட்டுகளில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - மதிரை
16. உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளின் எண்ணிக்கை? - ஏறத்தாழ 154
17. எக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது? - சனி
18. உலகம் உருண்டை வடிவமானது என்று கூறிய முதல் நூல்? - திருக்குறள்
19. கன்னியாகுமரிக்கும், மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர்?- இராணி மங்கம்மாள் நெடுஞ்சாலை
20. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாடு? - தென்னாப்பிரிக்கா
21. ‘சரசுவதி’ என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்? - வல்லாரைக்கீரை

1. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஒட்டக்கூத்தர்
2. 'ஒன்றேயென்னின்' என்னும் கடவுள் வாழ்த்துப்பாடல் அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்
3. கம்பர் தாம் இயற்றிய காப்பியத்திற்கு இட்ட பெயர் - இராமாவதாரம்
4. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - முருகன்
5. கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர் - வரத நஞ்சையப் பிள்ளை
6. புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு
7. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள் - பதினொன்று
8. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு
9. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் - 65
10. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பரிபாடல்
11. பரிபாடல் என்னும் நூல் - அக, புறப் பொருள் பாடல்களைக் கொண்டது.
12. அகநானூறு மணிமிடை பவளத்தில் உளஅள பாடல்களின் எண்ணிக்கை - 180
13. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை - 13 முதல் 31 அடி வரை
14. நற்றிணையைத் தொகுப்பித்தவன் - பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி
15. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை - 9 - 12 அடி வரை
16. கபிலரை "வாய்மொழிக் கபிலர்" எனப் போற்றியவர் - நக்கீரர்
17. குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பெருந்தேவனார்
18. குறட்பா என்பது - ஈரடி வெண்பா
19. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 38
20. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9
21. கொண்டாடப்பெறும் திருவள்ளுவர் ஆண்டின்படி அவர் வாழ்ந்த காலம் - கி.மு.13
22. பொருட்பாலின் இயல்கள் - அரசியல், அங்கவியல், ஒழிபியல்
23. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது - திருவள்ளுவமாலை
24. வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் - பாரதிதாசன்
25. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் - மூன்று
26. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு - காதை
27. சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவர் - அரும்பதவுரைகாரர்
28. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
29. தேனிலே ஊறிய செந்தமிழின் ... தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
30. வரி என்பது எந்த வகையைச் சார்ந்தது - இசைப்பாடல்
31. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு - 96
32. உத்தர காண்டத்தைப் பாடியவர் - ஓட்டக்கூத்தர்.
33. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை - 6
34. சுந்தர காண்டம் இராமாயணத்தில் - ஐந்தாம் காண்டம்
35. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுவபர் - அனுமன்
36. "சிறிய திருவடி" என்று அழைக்கப்படுபவர் - அனுமன்
37. தனயை என்ற சொல்லின் பொருள் - மகள்
38. இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது - கணையாழி
39. சீதாபிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் - ஒருதிங்கள்
40. வீரமாமுனிவரின் தாய்நாடு - இத்தாலி
41. கொன்ஸ்டான் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் - அஞ்சாதவன்
42. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகாதி
43. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துச் தந்தது - இலத்தீன்
44. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர் - சூசைமாமுனிவர்
45. பாரதிதாசனார் வெளியிட்ட இதழ் - குயில்
46. புரட்சிக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் - பாரதிதாசன்
47. பாண்டியன் பரிசைக் கைப்பற்ற நினைத்தவன் - நரிக்கண்ணன்
48. பாரதிதாசன் எழுதிய நூல்களுள் ஒன்று - குறிஞ்சித்திட்டு
49. சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்ற பாரதிதாசனின் நூல் - பிசிராந்தையார்.
50. கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சகன் என்றெல்லாண் புகழப்படுபவர் - ஓட்டக்கூத்தர்.

No comments:

Post a Comment